விமானத்தில் முட்டியது என்ன ? (படங்கள் இணைப்பு)

 சீன விமானம் ஒன்று வானில் 26,000 அடி உயரத்தில் பறந்தவேளை திடீரென அருகில் உள்ள விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. விடையம் என்ன என்று அறிந்து பலரும் தலையில் கையை வைக்கிறார்கள். அதிகமாக விமானிகளும் , விமானத்தில் பயணிப்பவர்கள் தாம் வானில் வேற்றுகிரக மனிதர்களின் விண்கலத்தை பார்த்ததாகக் கூறுவது வழக்கம். ஆனால் அதனை யாராலும் உறுதிசெய்ய முடியாது. ஆனால் நேற்று(11.06.2013) நடந்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவானில் சுமார் 26,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்த இந்தச் சீன விமானம் திடீரென பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. உராயும் சத்தம் பெரிதாகக் கேட்டது.

இதனையடுத்து விமானத்தை உடனே தரையிறக்க விமானி முடிவுசெய்து, அருகில் உள்ள விமானநிலையத்தோடு தொடர்புகொண்டார். அவர்களும் அனுமதி கொடுக்க விமானத்தை தரையிறக்கினார் விமானி. ஆனால் தரையிறங்கியதும் பார்த்தால் விமானத்தின் முன் பாகம் அப்படியே சளிந்து காணப்பட்டது. பாரிய உராய்வு காரணமாக இது ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. கழுகு போன்ற பறவைகள் மோதினால் இவ்வாறு உருவாகும் என பொலிசார் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அங்கே ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை. அதனால் இச் சந்தேகமும் அடிபட்டுவிட்டது. அப்படி என்றால் விமானத்தோடு மோதியது எது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது வேற்றுக் கிரக வாசிகள் பயணிக்கும் விண்கலத்தோடு மோதியதால் உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளது.

இதனையடுத்து நுண்பொருள் ஆய்வாளர்கள் வரவளைக்கப்பட்டு, விமானத்தின் முன் பாகத்தை ஆராய பணிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் அரிது என்று தெரிவித்தார். இருப்பினும் எது நடைபெற்றாலும் அதில் சில தடையங்கள் சிக்குவது வழக்கம் என்று தெரிவித்த ஆய்வாளர்கள், விமானத்தில் ஏற்பட்டுள்ள உராவில் ஒட்டியுள்ள துகள்களை எடுத்து ஆராயவுள்ளார்கள். அதுவரை பொறுத்திருக்கவேண்டி உள்ளது. சில வேளைகளில் விண்ணில் இருந்த கல் இவ்விமானத்தை உராய்ந்து சென்றிருக்கலாம் ...
நன்றி-அதிர்வு.

புலிகளின் பொட்டம்மான்: சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் !

புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் அவர்களின் புகைப்படம் !




பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை: இதுவரை நடக்காத புதிய சர்ச்சை! (படங்கள் இணைப்பு)

மத்திய பிரதே மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தி வைக்கப்பட்ட மாஸ் திருமணத்தில் தாலி கட்டும் முன்னதாக பல பெண்களுக்கு கன்னித்தன்மை குறித்த சோதனையும், கர்ப்பம் தொடர்பான சோதனையும் நடத்தப்பட்டது. இது இந்த மாநில அரசுக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

முதல்அமைச்சர் ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலத்தில் இந்த திட்டத்திற்கு இங்கு பெரும் வரவேற்பு உள்ளதால் மாவட்டம் முழுவதும் பல கிராமங்களில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல், புடலாக நடந்து வருகிறது.

ஆதிவாசி பெண்கள் :

இங்குள்ள பீயூட்டல் மாவட்டத்தில் ஹராத் கிராமத்தில் நேற்று ஏறககுறைய 400 ஜோடிகளுக்கு இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் ஆதிவாசி பெண்கள் அதிகம் இடம் பிடித்தனர், குறிப்பாக ஆதிவாசி பெண்கள் 90 பேருக்கு இந்த கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சோதனைக்கு பின்னர் இதில் சில பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று புறந்தள்ளப்பட்டுள்ளனர். இதனை சில பெண்கள் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை கேட்கிறது அரசு :

இச்சம்பவம் தொடர்பாக மாநில உயர் அதிகாரியிடம் கேட்டபோது; இது போன்ற சோதனைகள் எங்கும் நடத்தப்பட்டதில்லை. இதற்கு யார் காரணம் , இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்ற விவரம் குறித்து முழு அறிக்கை கேட்டுள்ளோம் என்றார். இது தொடர்பான விசாரணை குறித்து முழு அறிக்கையை மாவட்ட கலெக்டர் அரசுக்கு ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளார். ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



நன்றி-தமிழ் சி என் .

இயற்கையின் அதிசயம் (படங்கள் இணைப்பு)

ஜேர்மன் நாட்டின் சூழலியல் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழலியல் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை நடத்தியது.

இதில் கலந்துகொண்ட சர்வதேச புகைப்படக் கலைஞர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.







நன்றி-வீரகேசரி.

இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் அகோரம்! (படங்கள் இணைப்பு)

இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் விபரீதமான இறுதிச்சடங்கு முறை சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பயங்கர இறுதிசடங்கு முறையை தற்போது ஒரு பிரிவினர் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடைமுறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின்போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசி ‘கடல் சமாதி’ என்று அறிவிக்கின்றனர். எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்தவர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடைபிடிக்கின்றனர். ‘இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வருவார்கள்’ என்ற நம்பிக்கையில் பெட்டியில் உடலை வைத்து அதை அப்படியே தூக்கி கொண்டு போய், ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில், இடுக்குகளில், பொந்துகளில் வைக்கும் வழக்கம் சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வருகிறது.



இந்நிலையில், சீனாவில் இறந்தவர்களின் உடலை அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் அப்படியே உடலை வெட்டி கழுகுகளுக்கு இரையாக்கி இறுதி சடங்கு நடத்தும் பயங்கரம் நடக்கிறது. இதை ‘ஸ்கை பரியல்’ அதாவது, ஆகாய புதைப்பு என்கிறார்கள்.சீனாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. உடலை எரிக்க மரங்கள் கிடைக்காததாலும், புதைப்பதற்காக நிலத்தை தோண்டுவது மலைப்பாங்கான பகுதிகளில் கடினம் என்பதாலும் ‘ஆகாய புதைப்பு’ முறையை பின்பற்றி வந்தனர். இது மிகவும் அருவருப்பானது, சுகாதாரமற்றது என்பதால் 1960&களில் சீன அரசு இதற்கு தடை விதித்தது. ஆனால், 1980&களில் இருந்து சீனாவின் சில இடங்களில் மட்டும் இதை புத்தமத இறுதி சடங்கு என்ற பெயரில் மீண்டும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
திபெத்திலும் சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலும் ‘ஆகாய புதைப்பு’ அதிகளவில் நடக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம், மயானம் போல உள்ளது. இறந்தவர்களின் உடல் துணியால் கட்டப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறது. உடலுக்கு புத்தமத பிட்சு ஒருவர் முதலில் வழிபாடு செய்கிறார். அதன் பின்னர், ‘ரோக்யபாஸ்’ என்பவர் வெட்டும் சடங்கை செய்கிறார். உடலை ஆங்காங்கே கத்தியால் கிழித்து கூறு போடுகிறார். பின்னர் உடலை அங்கேயே வீசிவிடுகின்றனர். இதற்காகவே காத்திருக்கும் ராட்சத கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் ஆகியவை கூட்டம் கூட்டமாக குவிந்து உடல்களை கிழித்து தின்கின்றன. இது அடிக்கடி நடக்கும் காட்சி என்பதால் அப்பகுதியினருக்கு பழகிவிட்டது. ஆனால், வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.
நன்றி-புதிய உலகம் .

ரஷ்ய பொலிசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பூனைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம்! (படங்கள் இணைப்பு)

உலகத்துல யார் யாரயோலாம் கைது பண்றாங்க, ஆனா இங்க ஒரு பூனையை அரஸ்ட் பண்ணி ரஷ்யா போலீஸ் ஒரு மிகப்பெரும் சாதனையை செஞ்சிருக்காங்க. 

ஆம், ரஷ்யாவின் சிறை ஒன்றுக்குள் செல்போனை கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. அந்த பூனை செய்த தவறுதான் என்ன என்பதை கீழே பாருங்கள்..

பூனை கைதிகளிடம் வேவு பார்த்து செல்போன், பேட்டரிகளை எடுத்து சென்று தந்த குற்றத்திற்காக இந்த திருட்டு பூனை கைது செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது.

சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பூனையை கைது செய்தனர். சிறைக்குள் மேலும் என்னென்ன பொருட்கள் கடத்தி வரப்பட்டன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பிரேசில் நாட்டு சிறை ஒன்றுக்குள் சென்ற பூனையின் உடம்பில் செல்போன், பேட்டரிகள், பிளேடுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி-கதிரவன்.

அனைத்துலக வானெலிகளையும் ஒரே வலைப்பூவில் கேட்டு மகிழ.

அலுவலகங்களில் பணிபுரியும் பலருக்கும் இப்போது உற்ற தோழனாக இருப்பது இணைய வானொலிகள் தான். ஆனால் இதில் தாம் விரும்பும் வானொலிகளை தேடிக்கண்டுபிடிப்பது சிறிது கடினமான விடயம் ஆகும் அப்படியே கண்டுபிடித்தாலும் ஒவ்வொரு வானொலிகளும் தனித்தனியே இணையதளங்களை திறக்கவேண்டும். இக்குறையை போக்குவதற்கென்றே www.Livelk.com உருவாக்கப்பட்டுள்ளது.இதில் நீங்கள் விரும்பும் பல்வேறு நாடுகளில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது இந்த இணையதளத்திற்குச் சென்று நீங்கள் விரும்பும் வானொலிகளைக் கேட்டுமகிழுங்கள்.
Tamilbm.com tamil bookmarking news portal , tamil blogs aggregator

நோய்களை விரட்டு எலுமிச்சம் பழம்



எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாற்றை சமையலில் பயன்படுத்துகிறோம். சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் பொதிந்து
கிடக்கின்றன. எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம்.

அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன. ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.

முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்கடானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.

இத்தனை நன்மை செய்யக் கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக் கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும். அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்று விடும்.

கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும். நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறிகளும், மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தணிக்கும் வகையில் தான் உள்ளது. நோய்களை முழுவதுமாக குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால் நோய்வராமல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

நமது முன்னோர்களும், சித்தர்களும் காய்கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன் திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு.

உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்த குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமோ என்று கேள்வி கேட்கக் கூடாது. பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது.

நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய்கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய்கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த நார்சத்தற்ற நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம் தான் பெற முடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதி காலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

உயிரியல் ரசாயன மாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் சி ஆகும். ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறை தான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி. ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது.

தக்காளி, மிளகு, முட்டைக் கோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில் தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து ஆனால் ஒன்று தெரியுமா? இந்த மாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதை விட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது.

எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத் தான் வேண்டும். குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி கிராமும், பாலூட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சி யும் தினம் தேவையாகும். நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது.

முடிவில் நிறமாற்றம், முடி உதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம். எலுமிச்சம் சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு.

இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படையாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

நன்றி-வியப்பு.

எதிர்காலத்தில் இப்படியும் குளிக்கலாம்! (வீடியோ இணைப்பு)



தற்போது காணப்படும் பாத்ரூம் சவர்கள் நின்ற நிலையில் குளிக்கக்கூடியவாறே காணப்படுகின்றன. இருந்தபோதிலும் எதிர்காலத்தில் படுத்திருந்தவாறு குளிக்கும் வசதியை ஏற்படுத்தும் முகமாக கிடையான சவர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சவர்களில் குளிக்கும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மதுபானம் அருந்தும் பசுக்களின் அதிர்ச்சிக் காட்சி! (வீடியோ இணைப்பு)

மனிதர்களுக்கு தனது பாலை தானமாக வழங்கிவிட்டு தவிக்கும் பசுக்கள் தாகமெடுத்தாலும் தண்ணியடிக்காது என்பது பலரது எண்ணமும், நியதியுமாகக் காணப்பட்டுவந்தது.

ஆனால் நம்ம மனிசங்க எங்க பசுவையும் விட்டு வச்சாங்க அதுக்கும் தண்ணியடிக்கச் சொல்லிக்குடுத்துட்டாங்கள் பாருங்கோ...

எப்படியெல்லாம் முட்டாளாக்கிறாங்கப்பா? (வீடியோ இணைப்பு)

அடுத்தவர்களை முட்டாளாக்கி இரசிப்பதிலேயே அதிகளவானவர்கள் இன்பம் காண்கின்றனர். இதற்காகவே தனியாக ரூம் போட்ட யோசிப்பாங்கள் போல.....
அவ்வாறே மூளையைப் பிழிந்து சிந்தித்த சில முட்டாள்தனமான வேலைகளை காணொளியில் கண்டு ரசியுங்கள்.

பாம்பைக் கண்டு பதறி ஓடும் பெண்கள்! (சுவாரஸ்யமான வீடியோ)

ஆண்களை விடவும் பெண்களுக்கு பயம் சற்று அதிகம். இதைத் தெரிந்துகொண்டவர்கள் பெண்களை பயமுறுத்தி ரசிப்பது வழமை.
இங்கும் பார்க் ஒன்றில் சுற்றித்திரியும் பெண்களின் காலடியில் பாம்புகளை விட்டு அவர்களின் செயற்பாடுகளை பார்த்து ரசிக்கின்றார்கள் சிலர். சரி நாங்களும் பார்த்து ரசிப்போமா? வாருங்கள்.
 
© 2012 I tamil Web All Rights Reserved.
|